
குறுங்கதை – 5 : வழித்துணை
“ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் மனம் கேட்கவில்லை. கைப்பை காணாமல் போய்விட்டால் என்கிற பயம் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.




